சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் 41வது பிளாக்கில் வசித்து வருபவர் 25 வயது கலைவாணன் . இவரது மனைவி சவுந்தர்யா. இவர்கள் இருவரும் மீன் கடையில் பணிபுரிந்து வந்தார். தான் வசித்துவந்த குடியிருப்பில் உள்ள 3வது மாடியின் வீட்டுவாசலில் நேற்று இரவு கலைவாணன் குடிபோதையில் தூங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில், இரவு 11.50 மணி அளவில் தலை நசுங்கி கலைவாணன் கொடூரமாக உயிரிழந்து கிடந்ததை பார்த்ததும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கலைவாணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கலைவாணன் மனைவி கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடந்த 3 மாதத்துக்கு முன் கலைவாணனுக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சரளா என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டபோது கலைவாணனை அசிங்கமாக பேசியுள்ளார் என்று தெரிந்தது.
இதனையடுத்து சரளாவின் மகன் 21 வயது வசந்த். உறவினர்கள் கலைவாணி, தமிழ், சந்தோஷ் என்கிற வெள்ளை சந்தோஷ், அருண் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர். கலைவாணன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரச்னை காரணமாக கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா