அழகான ஆளுநர் செய்த சம்பவம்.. அதிர்ந்து போன சீன அரசு.. 58 அதிகாரிகளுடன் உடலுறவு!
Dinamaalai September 22, 2024 01:48 AM

சீனாவில் "அழகான ஆளுநர்" என்று அழைக்கப்படும் ஜாங் யாங், கியானான் மாகாணத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுநராகப் பணியாற்றியவர். அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 58 ஆண்  அரசு அதிகாரிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், 60 மில்லியன் யுவான் (சுமார் ரூ. 7.3 கோடி) லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியான ஆவணப்படத்தில் அவரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

52 வயதான அவர், தனக்கான இலாபகரமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும், ஒரு தொழிலதிபருக்கு உயர் தொழில்நுட்பத் திட்டங்களுக்கு நிலத்தை அனுமதிப்பதற்கும் தனது பதவியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக அவர் பெற்ற பலன்களுக்காக பலர் அவரிடம் பணிந்து உறவுகளை தொடர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில், ஜாங் யாங்கிற்கு தற்போது 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 மில்லியன் யுவான் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவரது கைது, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து காரசாரமான விவாதங்களை கிளப்பியுள்ளது, மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.