“வா தலைவா வா….” மாநாடு நடத்த அனுமதி கோரி மனு…..! விஜயின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்ப்பு……..!!!!
SeithiSolai Tamil September 22, 2024 02:48 AM

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்து புதிய அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலிடம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.

முன்னதாக, செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் அந்த தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 27 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதிய தேதியில் மாநாடு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பதால், இந்த மாநாடு கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.