திருச்சி எஸ்.பி விவகாரம்: X நிறுவனத்திற்கு எதிரான வழக்கு!
Seithipunal Tamil October 22, 2024 03:48 AM

திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் மற்றும் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பயனர்களின் கனக்கு விபரங்களை தர மறுத்த X நிறுவனத்திற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "போலி கணக்குகளை உருவாக்கி மிரட்டல் விடுபவர்களின் தகவல்களை அந்நிறுவனம் தர மறுக்கி்றது என்றால், அதற்கு அந்நிறுவனமும் துணை போகிறதே என்று பொருள்” என மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வாதம் வைக்கப்பட்டது.

இதற்க்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு தில்லை நகர் காவல் நிலையத்தில் இருந்து திருச்சி மாநகர சைபர் கிரைம் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பதில் அளித்தார்.

தொடர்ந்து பெங்களூரில் உள்ள X நிறுவனம் கூடுதல் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.