திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிக்னல் ஊழியர்கள், கொடி அசைக்கும் ஊழியர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்டவர்களிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் விபத்தை பொறுத்தவரை ரயில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழட்டியது யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி அருகே பயங்கரம்: இரு கார்கள் மோதல்! பலியான அரசு அதிகாரி!
கள்ளக்குறிச்சி அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த இந்த விபத்தில் முன்னாள் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறைத்துறை காவல் உதவி அலுவலர் இளங்கோவன் பலியாகியுள்ளார்.