திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், மன்னார்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் காவலாளியாக ரவி (வயது 54) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க:
இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக முகத்தில் காயத்துடன் காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்தார்.
தனிப்படை தீவிர விசாரணைஇந்த விஷயம் குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், ரவியின் உடலை மீட்டு ப்ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வேடசந்தூர் டிஎஸ்பி இலக்கியா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இதனிடையே, கொலை சம்பவத்தில் தொடர்புடைய கரட்டுப்பட்டி காலனியில் வசித்து வசித்து வரும் நவீன் (வயது 30), பாண்டி (வயது 25), நவநீதன் (வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மூவர் கும்பல் அதிர்ச்சி தகவல்இவர்களிடம் நடந்த விசாரணையில், மேற்கூறிய நவீனிடம் ரவி கடனாக பணம் வாங்கி, பின் அதனை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், நவீன் பணம் கேட்டபோது அவருடன் வந்த பாண்டி, நவநீதன் ஆகியோரையும் திட்டி இருக்கிறார்.
இதனால் மூவர் கும்பல் ரவி மீது ஆத்திரத்தில் இருந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் மதுபோதையில் கல்குவாரிக்கு சென்று ரவியை கல்லால் அடித்தே கொலை செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இதையும் படிங்க: