உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமி படித்து வந்துள்ளார். அந்த பள்ளி ஊழியர் ஆபாச வீடியோக்களை பார்த்து சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார். வழக்கத்திற்கு மாறாக சிறுமி அமைதியாக இருப்பதை பார்த்த பெற்றோர் என்ன நடந்தது என கேட்டுள்ளனர். அப்போது சிறுமி நடந்தவற்றை அழுது கொண்டே கூறியுள்ளார்.
பள்ளியில் சாப்பாடு கொடுக்கும் மாமா அசிங்கமான காரியங்களை செய்ததாக கூறினார். மேலும் கூர்மையான பொருட்களால் குத்துவதாகவும் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து சிறுமியின் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது சிறுமியின் அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி ஊழியரை கைது செய்தனர். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.