கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பாபு பாளையத்தில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த நிலையில் கனமழையால் எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இது குறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.