தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜ கண்ணப்பன் பதவி வகித்து வருகிறார். இவர் தனது மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாகவும், சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள நிலத்தை அபகரித்து குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின் ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை, முதல்வர் மு.க ஸ்டாலின் , துணை முதல்வர், தலைமை செயலாளர், வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோ - நங்கநல்லூர் இடையே உள்ள பரங்கிமலை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ராஜகண்ணப்பன் தனது மகன்கள் மூலம் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.