பெங்களூரில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து... ஒருவர் பலி... 14 பேர் மீட்பு... தொடரும் மீட்பு பணிகள்!
Dinamaalai October 23, 2024 12:48 AM

பெங்களூருவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த  கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டத்தில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 14 பேர் கட்டிட இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்த சம்பவத்தில் குறைந்தது 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து 2 மீட்பு வேன்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெங்களூருவில் கனமழை பெய்து வரும் நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

முதற்கட்ட விசாரணையில்  கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.