தவெக மாநாட்டு திடல் முழுவதும் 700 சிசிடிவி கேமராக்கள்!
Top Tamil News October 23, 2024 01:48 AM

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் வருபவர்களை முழுவதுமாக கண்காணிக்க 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் 90 சதவிகிதம் பணி  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநாட்டு திடலை பார்ப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் 26 ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. இதனால் மாநாட்டு திடலை பார்க்க ஆர்வத்தோடு வருபவர்கள் திருப்பி அனுப்பபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநாடு திடலில் முழுவதுமாக தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் அமைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளன. மாநாட்டு திடலை கண்காணிக்க மாநாடு திடல் முழுவதுமாக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் 700 வைக்கபடுவதால் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு 200 ஏக்கர் பரப்பளவில் நிலம் குத்தகைக்கு எடுக்கபட்டு வாகனங்கள் நிறுத்த மண் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.