இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்… சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தீபாவளி போனஸ் …!!!
SeithiSolai Tamil October 23, 2024 03:48 AM

ஆந்திர மாநிலம், முதல்வர் சந்திரபாபு நாயுடு தீபாவளி பண்டிகை முதல் ஆண்டுதோறும் பெண்களுக்கு மூன்று இலவச சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆந்திராவில் பி1 திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனையில் அவர் இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த திட்டம் பெண்களுக்கு சமையல் செலவைக் குறைக்கும்.மேலும் இந்த அறிவிப்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் பொருளாதார தாக்கம் பற்றியும் ஆந்திர அரசு கணக்கிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த இலவச சிலிண்டர் வழங்கல் காரணமாக, மாநிலத்திற்கு 13,423 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும் என சராசரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 2,684 கோடி ரூபாய் செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு, பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.