மாணவர்களே உங்கள் கவனத்திற்கு... கலெக்டர் பிரியங்கா பங்கஜம் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!!!
என்.நாகராஜன் October 24, 2024 04:14 PM

தஞ்சாவூர்: மாணவர்கள் கவனத்திற்கு... தஞ்சாவூர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 -ஆம் ஆண்டு நேரடிச்சேர்க்கை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

2024-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர், திருவையாறு மற்றும் ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 17.10.2024 முதல் 30.10.2024 வரை நேரடிச்சேர்க்கை மூலமாக பயிற்சியாளர்கள் சேர்க்கப்படவுள்ளனர். உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய தொழிற்பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. 

மாணவர்களுக்கு உதவும் வகையில் சேர்க்கை உதவி மையம்

இந்நிலையத்தில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் (Facilitation Centre) அமைக்கப்பட்டுள்ளது. TC. Marksheet, Community Certificate, Photo C நேரடியாக வந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். 2020-21-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்களே நீங்கள் என்ன செய்யணும்

Debit Card Credit Card/Net Banking / G-Pay வாயிலாக விண்ணப்பக் கட்டணம் ரூ. 50  செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் அனைத்து மாணவர்களும் TC (மாற்றுச் சான்று), Marksheet (மதிப்பெண் சான்றிதழ்),Community Certificate(சாதிச் சான்றிதழ்). Photo (புகைப்படம்), Aadharcard ( ஆதார் கார்டு போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாக வருகை புரிந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். 2020-21-ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து அதே நாளில் சேர்க்கை ஆணை வழங்கப்படும்.

அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது

இந்நிலையத்தில் பயிற்சியில் சேருபவர்களுக்கு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளான இலவச சீருடை, சைக்கிள், பாட புத்தகம், மாத உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். பயிற்சி முடித்தபின் வளாகத் நேர்காணல் மூலம் தொழிற்பழகுநர் பயிற்சி மற்றும் வேலை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

உடனே மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர் அல்லது அருகிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது 9994043023, 9965342967, 9840950504, 9442220049 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.