விசிக மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைப்பு… விரைவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்…!!
SeithiSolai Tamil October 24, 2024 05:48 PM

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தற்போது புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் விரைவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். கடந்த ஜூலை மாதம் 144 புதிய மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலர்கள், மண்டல துணை செயலர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில் உள்ள கட்சிகளில் விசிகவுக்கு தான் அதிக மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில் தமிழகத்தின் முதல்வராக திருமாவளவனை விசிக கட்சியினர் அறிவித்தனர்.

தற்போது மாநிலத்தில் அதிகாரம் மத்தியில் அங்கீகாரம் என்ற அரசியல் கொள்கையை கையில் எடுத்து விசிகவினர் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் விசிக போட்டியிட இருக்கிறது. இந்நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு 3 வாரத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஒரு மாவட்டத்திற்கு 3 முதல் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் பரிந்துரைக்கும் பெயர்கள் தான் மாவட்ட செயலாளர்கள் ரேசில் வருவார்கள். இந்த குழு குறித்த விவரம் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக அறிவிக்கப்படுவார்கள். இதைத்தொடர்ந்து ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகளும் முழுமையாக அறிவிக்கப்படுவார்கள். மேலும் இன்னும் 3 வாரங்களில் முறையான அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.