பெரும் சோகம்.. தந்தை இறந்த ஒரு மணி நேரத்தில் பிறந்த குழந்தை.. மீளா துயரத்தில் கதறும் தாய்!
Dinamaalai October 24, 2024 11:48 PM

தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வந்தவர் சிவா (28). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவி உள்ளார். லட்சுமி கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிவா திடீரென விபத்தில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

அவர் கர்னூல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் லட்சுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிகிச்சை பலனின்றி சிவா நேற்று உயிரிழந்தார். அவர் இறந்த ஒரு மணி நேரத்தில் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மேலும் தந்தை இறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறக்கும்போதே தந்தையை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் கணவரின் மரணம் மறுபுறம் குழந்தையின் பிறப்பு, பெண்  சொல்ல முடியாத பெரும் துயரத்தில் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.