உஷார் மக்களே... போலி மருத்துவரால் பலியான இளைஞர்... கதறும் உறவினர்கள்!
Dinamaalai October 25, 2024 02:48 PM

உஷாராக இருங்க மக்களே... ஒருமுறை இருமுறை செக் பண்ணிக்கோங்க. வட இந்தியாவில் மட்டுமே நிகழும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற குற்ற செயல்கள் எல்லாம் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அடுத்தவரின் உயிரைப் பற்றிய எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் பணம் சம்பாதிப்பதை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கிறார்கள் பலர். போலி மருத்துவரால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மேலத்திருகழிப்பாலையத்தைச் சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் கவிமணி (22). உடல் நலக்குறைவு காரணமாக சிதம்பரம் மந்தகரை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த தளபதி ராஜா (50) என்கிற சரவணன். இவர் முறையாக மருத்துவம் பயிலாதவர் என கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு வந்த கவிமணிக்கு இவர் ஊசி போட்டு, மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவிமணி வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்தார். கவிமணியுடன் சென்றிருந்தவர்கள் உடனடியாக கவிமணியை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கவிமணியைப் பரிசோதித்தமருத்துவர்கள் ஏற்கெனவே கவிமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கவிமணியின் தாயார் கவிதா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர் சரவணன் என்கிற தளபதி ராஜவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.