எழிலுக்காக கோபி செய்த உதவி… ரோகிணியிடம் சிக்கிய முத்து… ஜாலி பண்ணும் அப்பத்தா!..
CineReporters Tamil October 25, 2024 04:48 PM

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் நிகழ்ச்சி முடிந்துவிட அண்ணாமலை வீட்டிற்கு கிளம்புகிறார். இதனால் முத்துவை குடிக்க வைத்து வீடியோவை எடுத்துவிடலாம் என ரோகிணி திட்டம் போடுகிறார். ஆனால் முத்து மற்றும் மீனா கிளம்ப பார்க்க அண்ணாமலை இருந்து எல்லாத்தையும் முடித்துவிட்டு வரவேண்டும் என கூறி சொல்கிறார்.

மீனாவை சாப்பிடாம வர வைத்து விட்டு குடிக்கும் இடத்தில் முத்து மற்றும் ரவியை விடுகிறார். மனோஜ் குடித்துவிட்டு ஓவராக பேச பொறுமையாக இருக்கிறார். என செக் செய்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் முத்துவும் குடித்து விடுகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் இனியா டான்ஸ் மாஸ்டர் வேண்டுமென பாக்கியாவிடம் கேட்க அவர் அதற்கு மறுப்பு சொல்லி விடுகிறார். காலேஜில் நண்பர்களுடன் டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கும் இனியாவிடம் அவருடைய ஆசிரியர் டான்ஸ் மாஸ்டர் இல்லையா என கேட்கிறார். அம்மா ஒத்துக் கொள்ளலை என இனியா கூற நாளைக்கு உங்க அம்மாவை கூட்டிக் கொண்டு வா.

நான் சம்மதிக்க வைக்கிறேன் என சொல்லி செல்கிறார். கோபியின் நண்பர் அவருடைய நண்பரை அழைத்து வருகிறார். ஃபாரினில் இருந்து வந்திருப்பவர் இங்கு படம் தயாரிக்க இருப்பதாக கூறுகிறார். பெரிய இயக்குநரை விட வளர்ந்து வரும் இயக்குநரை வைத்து தயாரிக்கலாம் என கோபி ஐடியா கொடுக்கிறார். அதற்கு அவரும் ஒப்புக்கொள்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் கோமதி தன்னுடைய அம்மாவுக்கு சாப்பாடு தயார் செய்து வைத்திருக்க அதை பாண்டியன் சம்மதத்துடன் பழனியிடம் கொடுத்து விடுகிறார். ஹாஸ்பிடலில் அப்பத்தாவுடன் அவருடைய மருமகள்கள் இருக்க அவர்களை வீட்டிற்கு அழைக்கிறார் சக்திவேல்.

ஆனால் அத்தையுடன் உடல்நிலை முக்கியம் அவர்களை விட்டு வரமாட்டேன் என கூறி விடுகின்றனர். பாண்டியன் வீட்டில் கோமதி தன்னுடைய அம்மா சாப்பாடு குறித்து பேசியதே வீடியோவாக பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். கதிர் மற்றும் சரவணன் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.