பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்த நிலையில், கடந்த 2022ல் எமிலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்துள்ள டி. இமான் அதன் ஆரம்பகட்டமாக பார்வையற்ற தம்பதிகள் இருவருக்கு வீடு எடுத்து கொடுத்து அவர்களின் பார்வையுள்ள இரு பெண் குழந்தைகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், பார்வையற்ற தம்பதியினரையும் இரு பெண் குழந்தைகளையும் இசையமைப்பாளர் இமான் மற்றும் அவரது 2வது மனைவி எமிலி தத்தெடுத்துள்ளனர்.இது குறித்து பேசிய இமான், “பாலு மற்றும் அவரது மனைவி ஷீபா இருவருக்குமே பார்வையில்லை. அவர்கள் முதலில் அறிமுகமானார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பார்வை இருக்கிறது எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதை அறிந்த உடனே சந்தோஷப்பட்டேன். அந்த மகளை அவர்கள் எப்படி வளர்ப்பார்கள் என்கிற யோசனை வந்த நிலையில் தான் அவர்களை பராமரிக்க நினைத்தேன்” என்றார்.
2வதாக பிறந்த குழந்தைக்கும் பார்வை உள்ள நிலையில், இரு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள பேபி சிட்டர். அவர்களின் படிப்புக்கான தேவை என அனைத்தையும் என்னால் முடியும் அளவுக்கு செய்து வருகிறேன் என்றார். இந்த இரண்டு குழந்தைகளையும் ஆரம்பத்தில் இருந்தே இமான், தனது சொந்த குழந்தைகளைப் போலவே பார்த்து வருகிறார்” என்று இமானின் மனைவி எமிலி பெருமிதமாக கூறுகிறார்.
கண் பார்வையற்ற தம்பதியிடம் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து உள்ளார் டி இமான். அந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில், இரண்டாவதாக குழந்தை பிறந்ததால அதை கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டதை அறிந்த இமான், அந்த தம்பதியின் சம்மதத்தோடு அவர்களின் குழந்தையை தத்தெடுத்துள்ளார். இதன்மூலம் மீண்டும் தந்தையாகி உள்ள இமானுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.