Bigg Boss Tamil Season 8 Day 21: கேள்விகளால் Housemates ஐ மிரள வைத்த விஜய் சேதுபதி… கதறி அழுத சுனிதா!
Tamil Minutes October 28, 2024 03:48 PM

Bigg Boss Tamil Season 8 Day 21 இல் விஜய் சேதுபதி எபிசோடு என்றாலே ஹவுஸ் மேட்ஸ் அரண்டு போய் தான் உட்கார்ந்து இருக்கிறார்கள். ஏனென்றால் அவர் அப்படி தீயாய் கேள்வி கேட்கிறார். முகத்துக்கு நேராகவே பதில் கேட்டு சுற்றி வளைக்காமல் நேராகவே பேச வேண்டும் என்று கூறுகிறார்.

ஹோட்டல் டாஸ்க் யாரு தனிமனித தாக்குதல் செய்தார்கள் என்பதைப்பற்றி தான் மிக நேரம் கலந்துரையாடினார் விஜய் சேதுபதி. அடுத்ததாக இந்த வீட்டில் மேனேஜர் யார் கஸ்டமர் யார் ஹெல்பர் யார் என்ற டாஸ்கை நடத்தினார். இதில் யார் மற்றவர்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்று கூறினார்கள்.

கேர்ள்ஸ் ஐந்து பேர் கொண்ட குழு குரூப்பிஸமாக இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக விஜய் சேதுபதியே போட்டு உடைத்து விட்டார். சுனிதா பேண்ட் கொண்டு வரும்போது ஏன் உங்களால உங்க டீம்ல இருக்கவங்களுக்கு கொடுக்க முடியலையா என்று கேட்டுவிட்டார். நீங்கள் விளையாடுவது அவ்வளவு சரியாக இல்லை என்றும் சொல்லிவிட்டார். அதனால் சுனிதா கதறி கதறி நிகழ்ச்சி முடியும் வரையிலும் அழுது கொண்டே தான் இருந்தார்.

அடுத்ததாக யாரும் எதிர்பார்க்க வரையில் தர்ஷா குப்தா எலிமினேட் ஆகி இருக்கிறார். வெளியே வந்ததும் அர்னவ் என்ன செய்தாரோ அதேபோல தான் தர்ஷா குப்தா நேரடியாக என்ன வந்து நல்லா வச்சு செஞ்சா அனுப்பிட்டீங்க அப்படி இப்படின்னு பர்சனல் அட்டாக் பண்ணிவிட்டு சென்றார். உள்ளே சுனிதா ஜாக்குலின் அன்சிகா ஆனந்தி என்ன எப்படி குரூப்பிசம்னு சொல்லிட்டாங்களே அடுத்த வாரம் நம்ம என்ன பண்றது எப்படி விளையாடுவது என்று யோசித்துக் கொண்டே இருக்கின்றனர்.

எபிசோடு நேரத்திலும் சரி முடிந்த பிறகும் சரி ஆனந்தி ஆனந்த குரூப்பில் இல்லை நான் அந்த மாதிரி கிடையாது என்று ஒவ்வொருவரையும் திசை திருப்புவது போல் தெரிகிறது. ஆனந்தி இந்த சீசனின் விஷப்பாட்டில் என்று பெயர் வாங்க போகிறார் என்பது போல தான் தோன்றுகிறது. அடுத்த வாரம் எப்படி விளையாடுகிறார்கள் சுவாரஸ்யமாக விளையாடுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். விஜய் சேதுபதியும் ஆரோக்கியமாக சுவாரஸ்யமாக விளையாடுங்கள் என்று தான் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.