தெலுங்கானா மாநிலத்திலுள்ள ராஜ் கண்ணா சிர்சிலா மாவட்டம் நம்பள்ளி கிராமத்தின் ஊருக்கு வெளிப்புறமாக 30 குரங்குகள் ஒரே இடத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தன. இது குறித்து வனத்துறைக்கு அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் 30 குரங்குகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரங்குகளுக்கு யாரும் விஷம் வைத்துள்ளனரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, குரங்குகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இதற்கான காரணம் என்ன என்பது முழுமையாக தெரியவரும் என கூறினர். ஒரே இடத்தில் 30 குரங்குகள் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.