தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகளில் இன்று முதல் அக்டோபர் 30ம் தேதி வரை 1,31,828 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளியை ஒட்டி இன்று முதல் அக்டோபர் 30 வரை 11,176 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மற்ற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.