நாளை மறுநாள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு ? - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்!
Seithipunal Tamil October 28, 2024 11:48 PM

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நடப்பு ஆண்டில்  ஜூன் மாதம்  9-ம் தேதி நடைபெற்றது.

இதில் தேர்வு எழுத 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் இரண்டாவது கட்டமாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இன்னும் 2 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும், டி.என்.பி.எஸ்.சி அதிகார பூர்வ இணையதளம் மூலமாக தேர்வர்கள் சென்று தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.