Amaran: `சாய், நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்'- பாராட்டிய மணிரத்னம்; நெகிழ்ந்த சாய் பல்லவி
Vikatan October 28, 2024 11:48 PM
சென்னையில் நடைபெற்ற 'அமரன்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை சாய் பல்லவி குறித்து இயக்குநர் மணிரத்னம் பேசியது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
Amaran

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அமரன்'. சாய்பல்லவி 'இந்து ரெபேக்கா வர்கீஸ்' என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இயக்குநர் கலந்துகொண்டிருந்தார். தற்போது சாய் பல்லவி குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாய் பல்லவி குறித்துப் பேசிய மணிரத்னம், " சாய் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார். நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன். விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம்" என்று கூறியிருக்கிறார்.

மணிரத்னம்

இதைக்கேட்டுக் கொண்டிருந்த சாய் பல்லவி, நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார். பின், அவர் பேசும்போது, “ நான் நல்ல படங்களைத் தேர்வு செய்வதற்கு மணிரத்னம் படங்களைத் தொடர்ந்து பார்த்ததும் முக்கிய காரணம். இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என நினைத்திருக்கிறேன். ஆனால், அவர் என்னைப் பற்றி சொன்ன வார்த்தைகள் இனம் புரியாத ஆனந்தத்தைத் தருகிறது. கண்டிப்பாக, அவருடன் இணைந்து பணியாற்றுவேன்” என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இருவர் பேசியதையும் இணைத்து நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.