கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சேகர் என்பவரது மகன் மணிப்பறத்தி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பொய் வழக்கில் தனது மகனை கைது செய்ததாக கூறி சேகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சேகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.