மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்தில் காலியான ரயில் பெட்டியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு போர்ட்டர் (சுமை தூக்கும் தொழிலாளி) இன்று கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் மற்றும் அவரது மகன் பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு ரயிலில் வந்ததாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். அவர்கள் இறங்கிய பிறகு, நடைமேடையின் மறுபுறம் மற்றொரு ரயிலில் ஏறினார்கள்.
அந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. ஆனால் அந்த ரயிலில் இருந்த ஒரு போர்ட்டர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் போர்ட்டரை கைது செய்ததாக அவர் கூறினார்.