பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்.. பேருந்து ஓட்டுநர் அதிரடியாக கைது!
Dinamaalai February 04, 2025 06:48 AM

கோயம்பேடு பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாற்று பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் நேற்று (02.02.2025) பெங்களூருவில் உள்ள தனியார் பேருந்தில் தனது கணவருடன் சென்னை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தார்.

இரவு 11.00 மணியளவில் பேருந்து கோயம்பேடு பகுதிக்கு வந்தபோது, மாற்று பேருந்து ஓட்டுநர் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். பாதிக்கப்பட்டவரின் கணவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் PNS மற்றும் தமிழ்நாடு பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழு தீவிர விசாரணை நடத்தி, மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய நாமக்கல் பரமத்தி வேலூரைச் சேர்ந்த ராமசாமியின் மகன் கிருஷ்ணசேகரை (38) கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட கிருஷ்ணசேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.