நடிகை புஷ்பலதா காலமானார்..!
Newstm Tamil February 05, 2025 04:48 AM

ஏ.வி.எம்.ராஜனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா (87) இன்று காலமானார். சென்னையில் வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

தமிழில் 1961-ம் ஆண்டு 'கொங்கு நாட்டு தங்கம்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் நடித்து புகழ் பெற்றார்.

1963ஆம் ஆண்டு 'மெயின் பி லட்கி ஹூன்' என்ற ஹிந்தி படத்தில் நடித்த புஷ்பலதா, 'நர்ஸ்' என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

'நானும் ஒரு பெண்' திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜனுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

சிம்லா ஸ்பெஷல், சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் புஷ்பலதா நடித்துள்ளார்.

அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.