“இனி திருநங்கைகளுக்கு தடை”… அதிகாரப்பூர்வமான உத்தரவில் கையெழுத்து போட்டார் டிரம்ப்…!!
SeithiSolai Tamil February 07, 2025 02:48 PM

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டாவதாக பதவி ஏற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஆண், பெண் என இரு பாலினத்தவர்கள் மட்டுமே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இது குறித்த உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவின்படி பெண்கள் விளையாடும் போட்டிகளில் வீரர்களாக திருநங்கைகள் பங்கேற்பது நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, இந்த நிர்வாக உத்தரவின்படி பெண்கள் விளையாட்டு மீதான அநீதி முடிந்துவிட்டது. பெண்களை ஆண்கள் வெல்ல இனி அனுமதிக்க மாட்டோம். பெண்கள் விளையாட்டு பெருமைமிக்க பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாப்போம். ஆண்கள் எங்கள் நாட்டின் பெண்களை அடிக்க, துன்புறுத்த, ஏமாற்ற அனுமதிக்க மாட்டோம்.

இனி பெண்கள் விளையாட்டு பெண்களுக்கு மட்டுமே என தெரிவித்தார். பிறப்பால் ஆணாக இருந்து பின் பெண்ணாக மாறிய திருநங்கைகள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தடை செய்யும் உத்தரவை கையெழுத்திட்டுள்ளது அந்நாட்டு திருநங்கைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.