இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா... உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா... இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா... இதோ உங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்.
பொதுவாக ஒருவருக்குக் காதல் கைகூட வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும். தற்போது கோசாரப்படி சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று ராகுவோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். குருபகவான் ரிஷபராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியனவும் நடைபெற உள்ளன. இந்த கிரக மாற்றங்கள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சாதகமா என்பதை ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.
மேஷம் ராசிக்காரர்களுக்கு: மேஷராசிக்கு சுக்கிரன் குடும்ப ஸ்தானத்துக்கும் களத்திர ஸ்தானத்துக்கும் உரியவர். எனவே இயல்பாகவே காதல் திருமணம் நிகழ வாய்ப்பிருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள். இவர்களுக்குத் தற்போது சுக்கிரன் 12 - ல் ராகுவுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்கிறார். இந்த வேலன்டைன்ஸ் டேக்கு காதலிக்கு விலை அதிகம் உள்ள கிப்ட் வாங்கிக்கொடுக்கத் திட்டமிட்டிருப்பீர்கள். அந்த வகையில் செலவு அதிகரிக்கதான் செய்யும். மற்றபடி இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏழரை சனி தொடங்க இருக்கிறது. அதற்குப் பின் காதல் விஷயங்களில் நிறைய கவனம் தேவை. எனவே இந்த பிப்ரவரி 14 -ல் காதலைச் சொல்லத் திட்டமிட்டிருந்தால் தயங்காமல் சொல்லிவிடுங்கள். வெற்றியடைய வாய்ப்பு உண்டு.