பொதுவாக காலை வேளையில் டீ ,காப்பி குடிப்பது பிடிப்பது போல குளிப்பதையும் பழக்கமாக்கி கொள்ள வேண்டும் .அதுவும் அந்த நீர் குளிர்ந்த நீராக இருந்தால் மிக சிறந்தது .இது நம் மூளைக்கு புத்துணர்வை தரும் .மேலும் அன்றைய நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்
நாம் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க குளிப்பதற்கென்று சில வழி முறைகள் உள்ளன .அவை பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம் .
1.கோடை காலத்தில் குளியல் மிக அவசியம். சரியான முறையில் இல்லாவிட்டால் சருமம் மற்றும் தலைமுடியில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு.
2.பருவ காலத்துக்கு ஏற்ப நீரை பயன்படுத்துவது சிறந்தது. தலைமுடியை அலசும் போது அதிக சூடான நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
3.சூடான நீரை பயன்படுத்தினால் மயிர்கால்கள் வலுவிழக்க தொடங்கும். மிதமாக சுடுநீரை பயன்படுத்துவதே சிறந்தது.
4. 10 நிமிடங்கள் குளியலுக்கு செலவிடுவதே போதுமானது.
நீண்ட நேரம் குளிப்பதால் உடலில் எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
5. அதிகமாக வியர்வை வந்ததும் குளிக்க சென்று விடுவதால் இயற்கையாக உள்ள ஈரப்பதத்தையும், மென்மையையும் சருமம் இழக்க நேரிடும்.
6 கோடை காலத்தில் தினம் இருமுறையும், மழைக்காலத்தில் ஒருமுறையும் மட்டும் குளித்து வந்தால் தோலில் வறட்சி ஏற்படாது