மகளின் பெயருக்கு சொத்துகளை மாற்றும் ஷிவ் நாடார்.... முழுமையாக ரோஷ்னியின் கைக்கு செல்லும் ஹெச்சிஎல் டெக் நிறுவனம்....
ET Tamil March 10, 2025 02:48 PM

இந்தியாவின் 3வது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் நிறுவனம் பல்வேறு கார்ப்ரேட் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தொடங்கி, அந்த துறை பெரும் சாதனைகளை படைத்துள்ளார். இந்த நிலையில் அவரது மகளான ரோஷ்னி நாடாரின் பெயருக்கு சொத்துகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அதாவது நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை மகளிடம் ஒப்படைக்கும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக HCL டெக்னாலஜிஸின் நிறுவனத்தின் ஷிவ் நாடார், HCL கார்ப்பரேஷனில் தனது பங்குகளில் 47 சதவீதத்தையும்,Vama Delhi வையும் தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவுக்கு பரிசாக அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையடுத்து வாமா டெல்லி மற்றும் HCL கார்ப் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு முழுமையாக ரோஷினி நாடார் வசம் செல்லும். மேலும் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக ரோஷினி மாறுவர். இது குறித்த தகவல் பங்குச்சந்தைகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. வாமா டெல்லி மற்றும் HCL Corp நிறுவனத்தில் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா HCL Infosystems Ltd மற்றும் HCL Tech நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக மாறுவார். HCL இன்ஃபோசிஸ்டம்ஸில் வாமா டெல்லி வைத்திருக்கும் 12.94 சதவீத பங்குகள் மற்றும் HCL கார்ப் வைத்திருக்கும் 49.94 சதவீத பங்குகள் தொடர்பான வாக்களிக்கும் உரிமைகள் மீதான கட்டுப்பாட்டையும் ரோஷ்னி பெறுவார். இந்த பரிமாற்றம் HCL டெக்னாலஜியின் எதிர்கால வளர்ச்சியில் நாடார் குடும்பத்தின் தலைமையை வலுப்படுத்தும்.வாம சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டெல்லி) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் குறுக்கமான பெயரே வாம டெல்லி எனப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 47 சதவீத பங்குகளை ஷிவ் நாடார் தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா பெயருக்கு மாற்றுவதாகவும், இதை தனது மகளுக்கு பரிசாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளர். ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்புகளில் இளங்கலைப் பட்டமும், கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். தற்போது எச்.சி.எல் டெக்னாலஜிஸின் தலைவராக உள்ளார். 2020ம் ஆண்டு ஜூலையில் தனது தந்தையிடமிருந்து 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.அவரது நிறுவனப் பங்கிற்கு அப்பால், கல்வியில் கவனம் செலுத்தும் ஷிவ் நாடார் செலுத்து வருகிறார். இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் சிலவற்றை அவர் நிறுவியுள்ளார்.