மக்களே அலெர்ட்..! நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
Top Tamil News March 10, 2025 02:48 PM

மார்ச் 11-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் மார்ச் 11-ம் தேதி தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

10.03.2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

11.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

13.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

14.03.2025 மற்றும் 15.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கான   வானிலை முன்னறிவிப்பு:

இன்று (10-03-2025): வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 - 34° செல்சியஸை ஓட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24° செல்சியஸை ஓட்டியும் இருக்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.