திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்களாகும் நிலையில் இன்று கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பித்தார். அதில் 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழக பொருளாதார ஆய்வறிக்கை, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் தமிழகம் இந்தியா மற்றும் பிற மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ரூ.27.22 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், மக்கள்தொகையில் வெறும் 6% மட்டுமே இருந்தாலும், தமிழகம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களிக்கிறது. தனிநபர் வருமானம் (ரூ.2.78 லட்சம்) தேசிய சராசரியை விட 1.6 மடங்கு அதிகமாக உள்ளது, இது பரந்த அளவிலான செழிப்பை பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் உற்பத்தி சக்தியாக, தமிழ்நாடு ஆட்டோமொபைல்கள், ஜவுளி மற்றும் தோல் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது, இரண்டாவது மிக உயர்ந்த MSMEகளைக் கொண்டுள்ளது (35.56 லட்சம் நிறுவனங்கள்), மற்றும் அதிக விவசாய கடன்களை வழங்குகிறது. இந்தியாவின் மிகக் குறைந்த வறுமை விகிதத்தை (1.43%) அடையும் அதே வேளையில், சமூக முன்னேற்ற குறியீடு, SDG குறியீடு மற்றும் காலநிலை நடவடிக்கை ஆகியவற்றில் இது #1 இடத்தைப் பிடித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்நாடு வளர்ந்து வருகிறது, இந்தியாவின் வளர்ச்சிக் கதையிலும் முன்னணியில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ததும்பி வழியும் தமிழ் பெருமிதம் என்ற முழக்கத்துடனும் அதோடு உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம் என்ற முழக்கத்துடனும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் தற்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
சிவகங்கை, தென்காசி, நாகை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் அகழாய்வுக்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். வருடம் தோறும் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகைக்காண ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும். தமிழ் மொழியின் சிறப்புக்காக மதுரை உலக தமிழ் சங்கத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் புத்தகக் கண்காட்சி அமைக்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு 100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும். திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்திற்காக 2200 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் நிலத்தில் உலக தரம் வாய்ந்த வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும். ரூ.675 கோடி மதிப்பீட்டில் 40 வருடங்கள் பழமையான 102 கூட்டு குடிநீர் திட்டங்கள் மறு சீரமைக்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் விரைவில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தற்போது ஒரு கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகள் ஆயிரம் ரூபாய் பெற்று பயன் பெற்று வருவதாகவும் இதற்காக13 ஆயிரத்து 877 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும் மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தால் மாணவர்களின் வருகை மற்றும் ஊட்டச்சத்து அதிகரித்துள்ளது நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு செய்யப்படும். பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 10,000 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 37 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும். மேலும் சென்னை கோவை மற்றும் மதுரையில் 875 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.