சற்றே குறைந்த தங்கம்... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
Dinamaalai March 15, 2025 03:48 PM

சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை புதுப்புது உச்சங்களை தொட்டு வருகிறது. 

அந்த வகையில் நேற்று மார்ச் 14ம் தேதி ஒரே நாளில் 2 முறை தங்கத்தின் விலை உயர்ந்தது  இல்லத்தரசிகள் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.  அந்த வகையில் நேற்று மார்ச் 14 காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 8,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக 65,840 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று பிற்பகல்   தங்கம் கிராமுக்கு மேலும் 70 ரூபாய் அதிகரித்து, 8,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, எப்போதும் இல்லாத வகையில், 66,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், இன்று மார்ச் 15ம் தேதி  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ80 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8220க்கும் சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்தது. இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.640 குறைந்து, நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதலை  கொடுத்துள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.