உலக பேச்சு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் ஆண்டுதோறும் மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது.
நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15 ஆம் தேதி, உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது அதன்மீது நடவடிக்கை எடுத்தல், சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
இத்தினம் அனைத்துலக நுகர்வோர் அமைப்பின் சார்பில் அனுசரிக்கப்படும் தினமாகும். 1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜான் கென்னடி உலக நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவ்வேளையில் நுகர்வோர் உரிமைகளுக்கான மசோதா பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகளைப் பெற இந்த மசோதா வழிவகுத்தது. இதனை குறிப்பிடும் வகையில், இத்தினம் 1983ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
உலக பேச்சு தினம்!.
உலக பேச்சு தினம் ஆண்டுதோறும் மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது, இது "உலகம் முழுவதும் நேரடி பேச்சு நிகழ்வுகள் மூலம் உரைகள் மற்றும் பேச்சு உருவாக்கத்தை" கொண்டாடுகிறது. உலக பேச்சு தினம் 2015 இல் ஏதென்ஸ் ஜனநாயக மன்றத்தில் தொடங்கப்பட்டது. முதல் உலக பேச்சு தினம் மார்ச் 15, 2016 அன்று ஏதென்ஸ், சிங்கப்பூர், தவாவ் மற்றும் மாஸ்கோவில் மறக்கமுடியாத நிகழ்வுகளுடன் நடைபெற்றது .