வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம், முடினாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கோவிந்தராஜுக்கு ஷிவானி (13), நிரஞ்சனா (11) என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
சிறுமிகள் இருவரும் அரசுப்பள்ளியில் 9 மற்றும் 6ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இதனிடையே, சிறுமி ஷிவானி காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் மார்ச் 7 அன்று வேலூரில் ல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க:
அங்கு ஷிவானிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, ஒரு வார காலமாக தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழந்தார். அவரின் சிறுநீரகம், கணையம், நுரையீரல் உட்பட உள்ளுறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: