காங்கேயம்-திருப்பூர் சாலையில் சேமலையப்பன்(65) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் யூ திருப்பத்தில் திரும்ப முயன்ற போது பின்னால் வந்த அரசு பேருந்து சேமலையப்பன் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.