பதற்றம்... ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்!
Dinamaalai March 28, 2025 08:48 PM

 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதில்  2 தீவிரவாதிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதாவது கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 5 தீவிரவாதிகள் ஊடுருவியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  

அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் நடைபெற்ற  பயங்கர சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.