ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 தீவிரவாதிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதாவது கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 5 தீவிரவாதிகள் ஊடுருவியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் நடைபெற்ற பயங்கர சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.