அசத்தல் அறிவிப்பு..! AC வாங்கி 8 வருஷம் ஆகிடுச்சா..? அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!
SeithiSolai Tamil March 29, 2025 01:48 AM

நாடு முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகல் மட்டும் இல்லாமல் இரவு நேரங்களில் வெப்பம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மீண்டும் மின் நுகர்வானது அதிகரித்து வருகிறது. 2023- 24 வருடத்தில் நாடு முழுவதும் வீடுகளில் ஒரு கோடி ரூ.9 லட்சம் ஏசிக்கள் பயன்பாட்டில் உள்ளது என்று கூறப்படுகிறது. இ

இன்னும் 3 வருடங்களில் இது மேலும் 21 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் பழைய ஏசி-க்களை உபயோகத்திலிருந்து நீக்குவதற்கு புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி 8 வருடம் பழமையான ஏசிகளை மாற்றி வைத்து புதிய ஏசி வாங்குவதற்கு ஊக்கத்தொகை அல்லது மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். இதற்காக ஏசி உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.