இந்நிலையில் அது பாதலின் மார்பின் மீது பட்டு படுகாயம் ஏற்பட்டது. இந்த படுகாயம் காரணமாக சிறுவன் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில் உடனடியாக நண்பர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர்.
சிறுவனின் மரணத்திற்கு காரணம் முதலில் மாரடைப்பு என போலீசார் சந்தேகப்பட்ட நிலையில் பின்னர் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர். அப்போது தான் உண்மை தெரிய வந்தது. ஒரு பொருள் மிகவும் அதிவேகமாக வந்து இதயத்தின் மீது பட்டால் அது இதயத்தை தாக்கி உயிரிழப்பு ஏற்படும் என்பதன் அடிப்படையில் இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளதாக கூறினர். அலட்சியமாக செயல்பட்ட ரயில் பயணி மீது போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.