“8-ம் வகுப்பு மாணவர்களின் ஸ்கூல் BAG-ல் காண்டம் மற்றும் போதை பொருள்”… சோதனையில் தெரிந்த பகீர் உண்மை… இந்த வயசுல இப்படியா..? பரபரப்பு சம்பவம்..!!
SeithiSolai Tamil April 09, 2025 05:48 AM

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் கோட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் கல்வி மையத்தையும், பெற்றோர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், கத்திகள், இரும்புச் சங்கிலிகள், சைக்கிள் சங்கிலிகள், காண்டம் பாக்கெட்டுகள், கடிதப் பெட்டிகள் மற்றும் மயக்க மருந்துகள் போன்ற ஆபத்தான மற்றும் ஒழுங்கு விரோத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல் வெளிவந்தவுடன், பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர்கள் தெரிவித்ததாவது, சில மாணவர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாகிவிட்டிருக்கக்கூடும் என்றும், சிலர் பள்ளிக்குள்ளேயே போதைப் பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இத்தகைய பொருட்கள் மாணவர்களின் தவறான நடத்தை மட்டுமல்லாது, சமூக ஊடகங்களில் காணப்படும் தீய உள்ளடக்கங்களும், தவறான நட்பு வட்டங்களின் பாதிப்புகளும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலைமை பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, விசாரணை நடை பெறுகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்யும் வகையில் கண்டிப்பான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இது போன்ற சம்பவங்கள், மாணவர்களை தவறான பாதைகளில் இருந்து காப்பாற்ற பள்ளி மற்றும் பெற்றோர் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் மானசீக ஆலோசனை சேவைகளின் அவசியத்தை மீண்டும் நினைவுபடுத்துகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.