தாய் வீட்டிற்கு சென்ற புதுப்பெண்…. திருமணமான 2 மாதத்தில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
SeithiSolai Tamil April 09, 2025 05:48 AM

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரை சேர்ந்தவர் நேஹா. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நேஹாவுக்கு ஒரு வாலிபருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேஹா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த சமயம் நேஹாவின் தாய் கோவிலுக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து பார்க்கும்போது தனது மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேஹாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.