பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil April 21, 2025 06:48 AM

#featured_image %name%

astrology panchangam rasipalan dhinasari 3 இன்றைய பஞ்சாங்கம்: ஏப்ரல் 20

ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:|| 
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

சித்திரை * ~ 07
(20. 4.2025* ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ விச்வாவஷு வருஷம் {விச்வாவஷு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த* ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { *மேஷ மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ .3.00 pm வரை சப்தமி பின் அஷ்டமி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 8 .14 am வரை பூராடம் பின் உத்திராடம்
யோகம் ~ ஸித்தம்
கரணம் ~ பவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.03
சந்திராஷ்டமம் ~ 2 .17 pm வரை ரிஷபம் பின் மிதுனம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ சப்தமி
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (20-4-2025) ராசி பலன்கள் மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் !

எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சிறுதூர நடை பயிற்சிகளின் மூலம் மன அமைதி ஏற்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உணவு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்

அஸ்வினி : அமைதி ஏற்படும்.
பரணி : அனுபவம் கிடைக்கும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் !

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பயணம் மேற்கொள்வதற்கான சூழல் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
ரோகிணி : நட்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் !

செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பத்திர துறைகளில் சிந்தித்து செயல்படவும். தந்தைவழி உறவுகளிடம் இணங்கிச் செல்லவும். செயல்படும் விதத்தில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிருகசீரிஷம் : சோர்வான நாள்.
திருவாதிரை : சேமிப்புகள் குறையும்.
புனர்பூசம் : இணங்கிச் செல்லவும்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள் !

தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் நலனில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அமையும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அமையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் !

சகோதரரின் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் உண்டாகும். சொத்து விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். நீண்ட தூரப் பயணங்கள் ஈடேறும். கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆசைகள் நிறைவேறுவதில் இருந்துவந்த தடைகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : பயணங்கள் ஈடேறும்.
உத்திரம் : தடைகள் குறையும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் !

பொழுதுபோக்கான செயல்களின் மூலம் விரயம் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பிறமொழி மக்களிடம் கனிவுடன் செயல்படவும். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சோர்வு மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : விரயம் ஏற்படும்.
அஸ்தம் : கனிவுடன் செயல்படவும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் !

நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வரவுகளில் மந்தமான சூழல் இருக்கும். சுப காரியங்களில் தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். சுப காரியம் தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்படவும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
சுவாதி : முயற்சிகள் கைகூடும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் !

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
அனுஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கேட்டை : ஆதரவான நாள்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் !

தடைப்பட்ட சில காரியங்கள் முடியும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

மூலம் : புரிதல் மேம்படும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : கலகலப்பான நாள்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள் !

மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். துணைவரின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : தெளிவுகள் பிறக்கும்.
திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் !

தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் அமையும். வெளிவட்டாரத்தில் நட்புகளால் புதிய அனுபவம் ஏற்படும். வர்த்தகத்தில் சிந்தித்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வாகன வகையில் ஆதாயம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் சாதகமாகும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள் !

கணவன், மனைவிக்குள் புரிதல் மேம்படும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

பூரட்டாதி : புரிதல் மேம்படும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : வாய்ப்புகள் சாதகமாகும்.

தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

நன்னம்பிக்கை மொழி!
  • எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
  • நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
  • பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
  • வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
  • ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
  • ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.