இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து, விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் நிச்சயமாக அவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான முகாம் நடைபெறவிருக்கிறது. எனவே, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால், தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.