அப்போது இருசக்கர வாகனம் வேனின் மீது மோதிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் பேருந்தின் சக்கரத்தின் அருகே விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ஹெல்மெட் இல்லாமல் பயணித்த அவர்கள் உயிர் தப்பிய சம்பவம் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் டேஷ்காம் கேமராவில் பதிவானது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அவர் தன்னைத்தானே குற்றம் சாட்டுவாரா?இல்லையென்றால் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தனது பாதையை தடுத்ததற்காக அதன் மீது குற்றம் சாட்டுவாரா? என கேட்டுள்ளனர். இன்னொருவர் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதால் கர்மா வேகமாக வேலை செய்தது எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.