செப்டிக் டேங்கில் 2 குழந்தைகளுடன் குதித்த தாய்... மூச்சுத்திணறி குழந்தைகள் பலி!
Dinamaalai April 30, 2025 01:48 AM

சேலம் மாவட்டம் வாழப்பாடி  பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில் வசித்து வருபவர் விஜயகுமார். 35 வயதாகும் இவர்  கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி இளவரசி (32)  இவர்களுக்கு விக்னேஷ் (6) சதீஷ்குமார் (3) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் கட்டிட வேலைக்கான சென்று விடுவதால் அந்த சமயத்தில்  இளவரசி வீட்டருகே உள்ள ஒரு இளைஞருடன்   பேசி வருவதாகவும், தகாத உறவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த விஜயகுமாருக்கும் இளவரசியை கண்டித்ததாக தெரிகிறது.  

நேற்று மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் விஜயகுமார் வெளியே சென்றதை அறிந்து இளவரசி தனது இரண்டு குழந்தைகளையும் வீட்ட அருகே உள்ள பயன்படுத்தப்படாத ஆழமான செப்டிக் டேங்க் தண்ணீரில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொள்ள நின்று கொண்டிருந்தார். அப்போது இளவரசிக்கு பயம் வரவே அலறினார்.  வீட்டருகே உள்ள உறவினர் பெண்ஓடி வந்து பார்க்கும் பொழுது தண்ணீரில் மூழ்கிய நிலையில் கத்தியது தெரியவந்தது. 

உடனே அருகில் உள்ள ஒரு கயிறு மூலம் இளவரசியை மீட்டனர்.  பின்னர் இரண்டு குழந்தைகளும் உள்ளே இருந்தது தெரிய வந்தது.  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர் பரிசோதித்த நிலையில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.இளவரசி குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததால் இளவரசி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.