நான் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடிக்காம போயிருந்தா…. சசிகுமார் உருக்கம்…
Tamil Minutes May 03, 2025 05:48 PM

சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார். 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சசிகுமார்.

அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு ஈசன் எந்த திரைப்படத்தை இயக்கினார் சசிகுமார். இது தவிர சுப்பிரமணியபுரம் பசங்க ஆகிய திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் போன்ற குடும்ப கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தார் சசிகுமார்.

சசிகுமார் படம் என்றாலே எந்த ஒரு ஆபாசமும் இருக்காது குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. உடன்பிறப்பே கொடிவீரன் போன்ற குடும்பத்திற்கு முக்கியத்துவம் தரும் பல படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியான நடிகராகவும் இருந்து வருகிறார் சசிகுமார்.

தற்போது சசிகுமார் சிம்ரன் ஆகியோர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரிலீஸாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு அனைவரும் நல்ல விமர்சனங்களை கூறி உள்ளனர். இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சசிகுமார் இப்படத்தை பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், ஒரு 17 வயசு பையனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்களே என்னிடம் கேட்டார்கள். அவ்ளோ பெரிய பையனுக்கு அப்பாவாக நடிப்பதற்கு யாரும் முன் வரவில்லை தான். நானும் இந்த படத்தில் நடிக்காமல் போய்விட்டால் இப்படி ஒரு அருமையான படத்தை கொண்டு வந்திருக்க முடியுமா. அயோத்தி படத்தினால் நல்லது நடந்தது. அதேபோல் இந்த படத்தின் மூலமாகவும் நல்லது நடந்தால் அதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை என்று பகிர்ந்திருக்கிறார் சசிகுமார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.