சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர் கார்த்திக் மற்றும் இவரது மனைவி ஜோதிகா ஆகியோரும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர்.
1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சூர்யா. 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு என 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சூர்யா.
இவரை மேலும் பிரபலமாக்கியது சிங்கம் பட தொடராகும். சிங்கம் ஒன்று இரண்டு மூன்று என்ற மூன்று பாகங்களும் வெற்றி பெற்றது. 2015 காலகட்டத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் பெரிதாக வணீக ரீதியாக வெற்றிப் பெறவில்லை. இறுதியாக இவர் நடித்த கங்குவா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தை பெற்றது.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் Retro திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா. இதில் Retro திரைப்படம் முடிவடைந்து ரிலீஸாகி இருக்கிறது. இப்படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சங்களே வருகிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சூர்யா, என்னை பலரும் ஓவர் ஆக்டிங் நடிகர் என்று கூறுகிறார்கள். நான் அப்படி கிடையாது. கேமரா முன்னால் நிற்கும் போது அதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். என்னுடைய பெஸ்ட்டை எப்போதும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதேபோல் ஒரு சில படங்களில் என்னால் நடிக்க இயலாது. கார்த்தி நடித்த மெய்யழகன் படத்தில் கார்த்தி போல என்னால் நடிக்க இயலாது. அதையும் கையை தூக்கி நான் ஒத்துக் கொள்வேன் என்று பகிர்ந்து இருக்கிறார் சூர்யா.