இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் ஒரு பெண்மணி முதலையின் வாய்க்குள் கால் விடுவது போன்று தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது ஒரு நீர்நிலையில் முதலை ஒன்று இருக்கும் நிலையில் ஒரு இளம் பெண் கயிறு கட்டி முதலையின் மேல் அங்கும் இங்குமாக பறக்கிறார். தன்னுடைய காலை முதலையின் அருகே அதாவது வாய்க்கு அருகே கொண்டு செல்வது போன்று அந்த பெண் சாகசம் செய்கிறார்.
ஆனால் அந்த முதலை அசையாமல் ஒரே இடத்தில் இருந்தது. இருப்பினும் இதுபோன்ற சாகசங்கள் ஆபத்தை விளைவிக்கலாம். ஏனெனில் திடீரென முதலை காலை பிடித்து கவ்வி விட்டால் அந்த பெண் என்ன செய்வார் என்று பலரும் கூறுகிறார்கள். மேலும் அந்த பெண்ணின் சாகச வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்