கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் பயணித்த 4 பேர் இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் ஆந்திர மாநிலம் ஓங்கோல் அடுத்த பிரகாசம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். கொப்போலு என்ற இடத்தில் கோழி முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேரும், கார் மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்தனர்.